Saturday 12 October 2013

சமய திருவிழாக்கள்

எனக்கு சாமியின் மீது நம்பிக்கை இல்லை.சமய சடங்குகளில் சிலவற்றில் நம்பிக்கை இருக்கிறது.திருவிழாக்களை ஆதரிக்கவே செய்கிறேன்,ஏனெனில் கடவுளின் பெயரால் மனிதர்கள் உறவு கொள்கிறார்கள். ஆயுதபூஜை க்கு நம்பிக்கை இருப்பவர்கள் கடவுளை தரிசிக்கிறார்கள், தங்கள் பயன்படுத்துகின்ற ஆயுதங்களுக்கு பொட்டிட்டு வணங்குகிறார்கள். கடவுளின் பெயரால் கொண்டாடப்படும் திருவிழாக்களில் வழங்கப்படும் சன்மானமும் பலகாரங்களும் முக்கியமானவை. தொழிலாளர்கள் தினம் என்பது மே 1 ஆக இருந்தாலும் முழுமனதுடன் இத்தினத்தையே கொண்டாடுகிறார்கள். நகர வீதிகளில் தோரணம் விற்றுக்கொண்டிருக்கும் சிறுவர்களிடம் சிறிது தொகைக்காகவும் வாங்குங்கள். அவன் கனவு வரவிருக்கும் வெளிச்சமான தீபாவளி கொண்டாட்டமாய் இருக்கலாம்.

2 comments:

  1. வணக்கம்
    உண்மைதான்.பெரிய கடைகளில் பேரம் பேசாதவர்கள் 5கும் 10கும்பேரம் பேசாமல் வாங்க மறுக்கின்றனர்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் மனதின் உள்ளன்பு தெரிகிறது

      Delete